மாணவி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-08 13:18 GMT
தற்கொலை
ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டி யை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் தேவிஸ்ரீ (16). பி.மாத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி யில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் தேவிஸ்ரீயை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்மட்டிவிடுதி போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.