காவிரியாற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் உறவினரின் ஈமக்காரியத்துக்காக வந்த பிளஸ் 1 மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2024-05-10 05:57 GMT

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் உறவினரின் ஈமக்காரியத்துக்காக வந்த பிளஸ் 1 மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் முனிவேல் இவர் கம்மாளப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், மாது நேற்று தனது உறவினரின் ஈம காரியத்திற்காக, குடும் பத்தினருடன் ஒகேனக்கல் வந்துள்ளனர். பின்னர், ஆலம்பாடி பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது முனிவேல் ஆழமான பகுதியில் சென்று குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ் யுள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் முனிவேலை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து உறவினர்கள் ஒகே னக்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய முனிவேலை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின்னர் முனிவேலின் உடலை மீட்டனர். போலீசார் சட லத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News