மர்ம பொருள் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு

கொளத்தூரில் மர்ம பொருள் வெடித்ததில் +2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் அருகில் உள்ள 3 வீடுகள் சேதமடைந்தன.

Update: 2024-03-22 06:47 GMT

விபத்து நடந்த பகுதி 

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி கே எம் காலனி 38வது தெரு, முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன் வயது 40. இவரது மகன் ஆதித்ய பிர னவ் வயது 17. ஹரிகரன் மனைவி கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இந்த வீட்டை வாங்கி தந்தை மற்றும் மகன் வந்துள்ளனர். ஆதித்யப் பிரனங் முகப்பேர் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அறிவியல் மாணவர் என்று கூறப்படுகிறது. அடிக்கடி வீட்டில் ஏதாவது ஒரு ஆராய்ச்சிகளை செய்து வருவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு விதமான ஆராய்ச்சி செய்து வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது.அக்கம் பக்கத்தினர் அதனைப் பார்த்து எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஆதித்யப் பிரியன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் அருகில் இருந்தது மூன்று வீடுகள் சேதம் அடைந்தன. ஆதித்ய பிரியன் வீடு முழுவதும் சேதமடைந்து சம்பவ இடத்திலேயே ஆதித்த பிரனங் உயிரிழந்தார். வெளியே சென்று இருந்த அவர் தந்தை சம்பவ இடத் திற்கு ஓடி வந்து உள்ளே செல்ல முயற்சி செய்தார். ஆனால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு  துறையினர் வந்து ஆதித்ய பிரணவ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News