மாணவி மாயம் - போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 02:40 GMT

பெண் மாயம் 

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் தேசக்கனி (19), முள்ளக்காட்டில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை மணிவேல் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News