கண்மாயில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

Update: 2023-11-14 05:04 GMT
நீரில்  மூழ்கி மாணவன் பலி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கண்மாய் கிடங்கில் சிக்கி மாணவன் உயிரிழப்பு

முதுகுளத்தூர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நிகாஷ்கண்ணன் (14) இவர் நண்பர்களுடன் பந்து விளையாடியபோது பந்து கண்மாய் உள்ளே உள்ள வெட்டுக் கிடங்கில் விழுந்துள்ளது. எல்லோரும் சேர்ந்துபோய் எடுக்க முயன்றுள்ளனர். இதில் நிகாஷ் கிடங்கில் இறங்கி பந்தை எடுக்க முயன்றுள்ளார். கிடங்கில் மாட்டிக் கொண்ட நிகாஷ்கண்ணனை நண்பர்கள் சேர்ந்து இழுத்தும் முடியாததால் மானவனின் வீட்டில் தகவல் சொல்ல வந்துள்ளனர். மாணவனின் வீடு பூட்டி கிடக்கவே நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பாண்டி தனது மகனை காணவில்லை என தேடியபோது உடன் விளையாடிய நண்பர்கள் நிகாஷ் கண்ணன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவன் நிகாஷ் கண்ணன் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து பாண்டி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர் நிகாஷ் கண்ணன் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Similar News