டாஸ்மாக் கடையை மூடணும் கலெக்டரிடம் மாணவிகள் மனு!

டாஸ்மாக் கடையை மூடணும் கலெக்டரிடம் மாணவிகள் மனு!

Update: 2024-07-03 11:37 GMT
புதுக்கோட்டை: பெருங்களூரை சேர்ந்தபள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெண்கள் சிலர் நேற்று காலை புதுகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பெருங்களூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடை அமைந்துள்ள பகுதி வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருவோர் போதையில் அந்த வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்கின்றனர். தட்டிக் கேட்டால் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இந்த கடையை மூட வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News