மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது!

மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என சார்பு நீதிபதி ராஜேந்திர கண்ணன் அறிவுரை வழங்கினார்.

Update: 2024-06-27 13:37 GMT

மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என சார்பு நீதிபதி ராஜேந்திர கண்ணன் அறிவுரை வழங்கினார்.


புதுக்கோட்டை மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, அத்துடன் போதைப் பொருள்களுக்கு எதிராகவும் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான டி. ராஜேந்திர கண்ணன். புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசுகையில், போதைப் பொருள்களைப்பயன்படுத்துவது அவரவரின் உடல் நலனுக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் செயலாகும் என்றார் ராஜேந்திர கண்ணன். நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள் த. அங்கவி, ஆர். யசோதா, வி. மணிகண்டன், கே. மதியழகன். ஏ. பர்வீன் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் பேசினர். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை உதவியாளர் கே. மணிமேகலை நன்றி கூறினார்.
Tags:    

Similar News