மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்

செங்கோட்டையில் மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

Update: 2024-07-04 01:44 GMT

செங்கோட்டையில் மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.


தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள செங்கோட்டை லாலா குடியிருப்பு, புளியரை, வல்லம், இலஞ்சி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தென்காசியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நேரம் தென்காசியில் இருந்து லாலா குடியிருப்பு செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டுகளில் அதிக கூட்டத்துடன் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உடனே காவல்துறை பார்வையிட்டு பள்ளி மாணவர்களை பேருந்தில் உள்புறத்தில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News