மகளிர் உரிமைத் துறை சார்பில் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-15 06:04 GMT

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் அ.ச.குமரி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன், கூடுதல் ஆட்சியர் ஆ.செ. ரிஷப், மகளிர் திட்ட அலுவலர் சரண்யா தேவி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) நெ.சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News