விழுப்புரத்தில் தனியார் பீர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

விழுப்புரத்தில் தனியார் பீர் தொழிற் சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-03-27 11:12 GMT

 தீ விபத்து

விழுப்புரம் வழுதரெட்டி எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள தனியார் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரனெ தொழிற்சாலைக்கு உள்ளே உள்ள புகை போக்கி பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பிடித்து எரிந்துள்ளது. இதனால், அச்சமடை ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், முன்னணி வீரர் ஷாஜகான் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். தொழிற்சாலை புகை போக்கி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அசம்பாவிதம் ஏதும் இன்றி தொழிலாளர்கள் தப்பினர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News