கோவில்பட்டியில் திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி

கோவில்பட்டியில் திடீரென பலத்த மழை பெய்த நிலையில், கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-10 14:58 GMT

 கோவில்பட்டியில் திடீரென பலத்த மழை பெய்த நிலையில், கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான சாரல் மழையுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் கோடை மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News