திடீரென பற்றி எரிந்த கார், பொதுமக்கள் ஓட்டம்

மதுராந்தகத்தில் விபத்தில் சிக்கிய கார்,சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-29 11:10 GMT

மதுராந்தகத்தில் விபத்தில் சிக்கிய கார்,சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சாலை விபத்தில் சேதமடைந்த கார் ஒன்றை மதுராந்தகம் போலீசார் மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.. இந்த கார் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் அப்பகுதியில் கடை வைத்திருந்தோர் சாலையில் செல்வோர் அனைவரும் பதட்டத்தால் ஓட்டம் பிடித்தனர்.. கொழுந்துவிட்டு எரிந்த கார் முழுமையாக தெரிந்து கொண்டிருக்கும் நிலையில் மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News