கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-13 08:28 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வீரபாண்டியில் ஸ்மார்ட் மீட்டர் மின் திட்டத்தை கைவிடக் கோரி மின்வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, வட்ட செயலாளர் தெய்வீகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, துணைச் செயலாளர் தங்கராசு, பொருளாளர் ராமு முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் ஸ்டாலின் மணி,வட்ட தலைவர் கொளஞ்சி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Tags:    

Similar News