சிவகாசியில் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி...

சிவகாசியில் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி...

Update: 2024-07-04 05:43 GMT

காவல்துறை விசாரணை


விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சந்தனமகாலிங்கம் (37) இவர் சிவகாசி அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.கணவன் மற்றும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்த நிலையில் நேற்று காலை வீட்டில் வைத்து சந்தன மகாலிங்கம் தூக்கிலிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் சிவகாசி போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பணிசுமை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து மல்லி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் மற்றும் சிவகாசி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News