கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்

சேலம் மாநகரில் கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோரை கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார்

Update: 2024-04-08 13:08 GMT

சேலம் மாநகரில் கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோரை கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார்


தமிழகத்தில் கோடைகாலம் தூங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாக 105 டிகிரி வெப்பம் பதிவாகியது இதனால் பொதுமக்கள் வெளியில் வராத அளவிற்கு வெப்பம் சுட்டெரித்தது. இந்த நிலையில் சேலம் மாநகரின் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதியுற்று வந்தனர்.

இந்தநிலையில் சேலம் மாநகரில் பணிபுரிந்து வரும் 125 போக்குவரத்து காவலர்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட தெர்மாகூலால் செய்யப்பட்ட தொப்பிகளை மாநகர காவல் ஆனையாளர் விஜயகுமாரி இன்று காவலர்களுக்கு வழங்கி நீர் மோர் வழங்கினார்.

போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணியை மக்கள் சேவகன் என்ற அறக்கட்டளையினர் கோடை காலம் முடியும் வரை போக்குவரத்து காவலர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று வழங்குவார்கள் என தெரிவித்தார். இதுபோன்று சேவை செய்யும் அறக்கட்டளைக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Tags:    

Similar News