கோடை கால விளையாட்டு  பயிற்சி முகாம் நிறைவு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

Update: 2024-05-13 12:12 GMT

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவியர்களின் விடுமுறையினை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் ஏப்ரல் மே மாதங்களில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் கடந்த  29.04.2024 அன்று முதல் இன்று (13.05.2024) வரை 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடர்ந்து நடைபெற்றது.         

   கோடைக்கால பயிற்சி முகாமில் மொத்தம் 449 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று (13-ம் தேதி) சான்றிதழ்கள் வழங்கினார்.            இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் ராஜேஷ், நன்கொடையாளர்கள் அஜித் குமார், பால்ராஜ்,  பயிற்சியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News