கொட்டாரம் மகப்பேறு நிலையத்திற்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-28 02:43 GMT
மருத்துவ உபகரணம் வழங்கிய மீனவ மக்கள் வளர்ச்சி இயக்க தலைவர் சகாயம்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்திற்கு வரும் மகப்பேறு தாய்மார்களின் - குழந்தையின் இதய துடிப்பை அறியும் கருவி உட்பட சில மருத்துவ உபகரணங்கள் வழங்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் சார்பாக அதன் நிறுவனரும், முன்னாள் குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவரும், தோவாளை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவரு மான இ எஸ் சகாயம் சுகாதார நிலையத்துக்கு வழங்கினார். சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முஹமது ஆசாரூதின் உபகரணங்களை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கொட்டாரம் கார்த்திக், சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News