ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Update: 2024-04-27 01:07 GMT

சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேனேஜிங் டிரஸ்டி சினேக லதா பொன்னையா வழங்கினார். அதன்படி, காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் முஷ்டகுறிச்சி, கோபாலபுரம், அழகாபுரி மற்றும் ஆவுடையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News