அரசு துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 5 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-07-03 09:06 GMT

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 5 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் தாசில்தார்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களின் சாவியினை கலெக்டர் பிரசாந்த் அலுவலர்களிடம் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் தாசில்தார்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 5 புதிய வாகனங்களின் சாவியை அந்தந்த அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி பிரபாகரன், சங்கராபுரம் கோபாலகிருஷ்ணன், உளுந்துார்பேட்டை விஜயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News