காஞ்சி சங்கரா மருத்துவமனைக்கு ரூ.14 லட்சம் டயாலிசிஸ் கருவி வழங்கல்

ஏனாத்துாரில் உள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ. 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய டயாலிஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-15 12:09 GMT

ஏனாத்துாரில் உள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ. 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய டயாலிஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், டயாலிசிஸ் செய்யும் கருவியை, கமலாதேவி துளிச்சண்ட் பக்மர் சாரிடேபிள் டிரஸ்ட் மற்றும் காந்தி குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர். இதை, ஏனாத்துார் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். சங்கரா பல்நோக்கு மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீராம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News