சுப்ரீம் கோர்ட் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு !

Update: 2024-07-18 07:25 GMT

புதிய நீதிபதிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அனிருத்தா போஸ், நடப்பு ஆண்டின் ஏப்ரல் 10-ந்தேதி ஓய்வு பெற்றார். இதேபோன்று, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா இந்த ஆண்டின் மே 19-ந்தேதி ஓய்வு பெற்றார். அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், காலியாக இருந்த அந்த இரு பணியிடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் பணியை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் மேற்கொண்டது.

சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, இந்திய தலைமை நீதிபதியுடன், ஜனாதிபதி கலந்து ஆலோசனை செய்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இரு நீதிபதிகளையும் பரிந்துரைக்கும்போது, பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் பற்றி கொலீஜியம் சுட்டி காட்டியிருந்தது. நீதிபதிகள் நியமனத்திற்கு, கடந்த 16-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

இதன்படி, நீதிபதிகள் இருவரும் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Tags:    

Similar News