கள்ளக்குறிச்சி நகராட்சியில் கண்காணிப்பு கேமரா

கள்ளக்குறிச்சி நகராட்சியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-11 04:55 GMT

கண்காணிப்பு கேமராக்கள்

கள்ளக்குறிச்சி நகராட்சி 13வது வார்டில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் 16 இடங்களில் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., ரமேஷ், நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சண்முகம், கவுன்சிலர் செல்வம், விஜயகுமாரி மற்றும் போலீசார், கவுன்சிலர்கள் பங்கேற்னர்.
Tags:    

Similar News