குருவிமலை ஊராட்சி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

போளூரில் நடந்த உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாமில் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எண்ணும் எழுத்தும், கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு செய்தார்.

Update: 2024-02-01 04:10 GMT

ஆட்சியர் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உங்களைத் தேடி,உங்கள் ஊரில்"திட்டத்தின் கீழ் போளூர் ஊராட்சி ஒன்றியம் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எண்ணும் எழுத்தும், கற்றல் திறன் குறித்து நேரில் சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் வகுப்பறையில் பள்ளி மாணவர்களுடன் அவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News