பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

பசுமத்தூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு செய்தார்.

Update: 2024-06-13 16:37 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

வேலூர் மாவட்டம் பசு மாத்தூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மக்காச்சோளங்களை மானிய விலையில் வழங்கினார்.

தொடர்ச்சியாக பசுமத்தூர் அரசினர் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு மழைநீர் தேங்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அதே கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று இயங்கி வரும் ஊதுபத்தி தொழிற்சாலையையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

Tags:    

Similar News