நொய்யல் ஆற்றில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு!
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நொய்யல் ஆற்றில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 06:50 GMT
ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நொய்யல் ஆற்றில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு. தமிழகம் முழுவதும் பரவலான நிலையில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் முழுவது திருப்பூரில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பூரில் கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.