பட்டாசு ஆலையை ஆய்வு செய்த தாசிதார்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையை தாசிதார் வடிவேல் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-15 09:46 GMT
சிவகாசி அருகே கட்டவிரோதமாக சரவெடி தயார் செய்த பட்டாசு ஆலைக்கு சீல்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் சட்டவிரோதமாக சரவெடி தயாரித்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.சிவகாசி அருகே அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அசோக்,இவருக்கு அதே பகுதியில் ஸ்ரீ பிரியா பட்டாசு ஆலை உள்ளது.இங்கு தாசில்தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலை வளாகத்தில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக சரவெடி தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.
Tags:    

Similar News