பொன்னமராவதியில் தமிழர் திருநாள் விழா!

பொன்னமராவதியில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.

Update: 2024-02-06 14:13 GMT

பாராட்டு சான்றிதழ் வழங்கல் 

பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறை சார்பில் தமிழர் திருநாள் விழா இரண்டு நாட்கள் நடந்தது.

முதல் நாள் பொன் புதுப்பட்டி வேங்கை ஊரணி அருகில் இருந்து தமிழன்னை ஊர்வலம் தொடங்கியது. டாக்டர் மதியழகன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் பழனியப்பன் அ. செ. செட்டியார் அன்கோ உரிமையாளர் ஜெய கொண்டான், ஆதிகாலத்த அலங்கார மாளிகை உரிமையாளர் மணிகண்டன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ராஜா முகமது வரவேற்றார். பழனியப்பன் நன்றி கூறினார்.

தொடர்ந்து இயல் அரங்கம் நடந்தது தமிழ் பாசறை தலைவர் பாலமுரளி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ரமேஷ் வரவேற்றார். புதுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் தங்கமூர்த்தி பேசினார். செயலாளர் மகா சுந்தர், திரைப்பட இயக்குனர் கண்மணி ராஜா முகமது, காரைக்குடி தமிழ் செல்வன் ஆகியோருக்கு தமிழ் தொடர் விருது வழங்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் சுந்தரி, துணைத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புதிய நிர்வாகிகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இளவட்டக்கல் தூக்குதல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News