தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-03 06:04 GMT
ஆர்ப்பாட்டம் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், சரண்டர் ஊதியம், அவுட்சோர்சிங் - கான்ட்ராக்ட் நியமன இரத்து, ஊதியக் குழு நிலுவை, கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான தமிழக அரசின் அரசாணை எண்.33 இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். சார்பில் கருப்பையா, தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துரையை மாவட்டச் செயலாளர் செல்வகணேஷ் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வழங்கினார் மேலும்  பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News