துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

Update: 2024-07-18 08:34 GMT

துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில்ஆகியவற்றை விரைவாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை வழங்குவது நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பாமாயில் மற்றும் துவரம்பருப்பு வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழ்நாடு உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News