தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-15 05:00 GMT

ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் பழ. சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வெ. தனராஜ், மத்திய மண்டல மகளிரணி செயலர் இரா. மோகனா, மாநிலத் துணைத் தலைவர் செல்வேந்திரன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். தலைமை ஆசிரியர் பதவி உயர்வை முடித்துவிட்டு முதுகலை ஆசிரியர் கலந்தாய்வை நடத்த வேண்டும். ஆசிரியர் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோடை விடுமுறையை 100 சதவிகிதம் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News