நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகம் திறப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் நித்திரவிளையில் திறக்கப்பட்டது.

Update: 2024-03-04 06:33 GMT


தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் நித்திரவிளையில் திறக்கப்பட்டது.


தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் நித்திரவிளையில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரனேஷ்குமார் தலைமை தாங்கினார். ராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சோ. சுரேஷ் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் செலின் ஷீபா மற்றும் மகளிரணியினர் குத்துவிளக்கு ஏற்றினர். சிறப்பு விருந்தினர்களாக விளவங்கோடு தொகுதி பொறுப்பாளர் ரூபின் ஆன்டனி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கிறிஸ்துராஜ், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News