தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-07-02 01:19 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்லடம் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ,  மதுரை டி. கல்லுப்பட்டி கோவிலாங்குளம் அழகேந்திரன் என்கின்ற இளைஞன் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆணவ படுகொலை செய்ததை கண்டிப்பதாகவும் , ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் , சாதி ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் ,  மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்

Tags:    

Similar News