பாரம்பரிய சின்னமாக மாறும் தாமிரபரணி ஆற்றுப்பாலம்
பழமையான தாமிரபரணி ஆற்று பாலம் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.;
Update: 2024-03-17 06:55 GMT
பழமையான தாமிரபரணி ஆற்று பாலம் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பாரம்பரிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.