ராசிபுரம் அருகே சவுக்கு லோடுடன் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து

ராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியில் சவுக்கு லோடுடன் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

Update: 2024-06-06 15:00 GMT

விபத்துக்குள்ளான லாரி

நாமக்கல்லில் இருந்து, ராசிபுரம் வழியாக சவுக்கு மரமக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கிச் சென்றது. காக்காவேரி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் குடியிருப்பு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை யல் லாரி ஓட்டுனர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பில் கவிழ்ந்து இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News