டீக்கடை உரிமையாளர் மரணம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை உரிமையாளர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-04 12:50 GMT

மாரடைப்பு 

சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்திருந்தார். இன்று சேகர் கடையில் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கீழே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனே சேகரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சேகர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News