தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு

Update: 2024-07-03 09:30 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மாவட்டம், மல்லல் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள இயற்பியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப் பணியிடம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. இந்த காலிப்பணியிடத்துக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக இருப்பவா்கள், வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டியலினத்தவருக்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி, அதன் அருகில் உள்ளவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பத்தை நிறைவு செய்து, வருகிற ஜூலை 5-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்க வேண்டும் என‌ மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News