புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவர்களை மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Update: 2024-03-07 15:30 GMT

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசு உத்தரவின்படி 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை வகித்தார்.இதில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ மாணவிகளை மாலை அணிவித்தும்,பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியைகள் வரவேற்றனர்.

Tags:    

Similar News