குடும்ப சுமையால் இளம்பெண் தற்கொலை

பூச்சாத்தனுாரை சேர்ந்த ஜாய் சங்கரி குடும்ப சுமையால் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-26 12:47 GMT

பைல் படம் 

பந்தநல்லுார் போலீஸ் சரகத்திற்குஉட்பட்ட பூச்சாத்தனுார் கிழத்தெரு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி சித்ரா(60). ராஜேந்திரன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள் கள், 2 மகன்கள். மூத்த மகள் ஜாய் சங்கரி (39). இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனராக பணியாற்றி வந்தார். தனது இரண்டு சகோதரிகளுக்கு ஜாய் சங்கரி முன் நின்று திரும ணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் 2 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்களை படிக்க வைத்துவந்துள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந் ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கதிராமங்க லத்தில் ஜாய் சங்கரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News