இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் திருமணம்

சேலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் காதலனுடன் அரக்கோணத்தை சேர்ந்த இளம்பெண் திருமணம் செய்தநிலையில், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-02-19 13:17 GMT

 சேலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் காதலனுடன் அரக்கோணத்தை சேர்ந்த இளம்பெண் திருமணம் செய்தநிலையில், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சேலம் அடுத்த தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அரக்கோணத்தை சேர்ந்த தர்ஷினி தேவி(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பினனர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு காதலனை தேடி தர்ஷினி தேவி சேலம் வந்தார்.

இருவரும் நேற்று மாலை கரபுரநாதர் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு டவுன் மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது காதலனுடன் செல்வதாக தர்ஷினிதேவி தெரிவித்தார். இதையடுத்து அவர் காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News