சேலத்தில் இளம்பெண் வெட்டி கொலை - போலீசார் விசாரணை
சேலத்தில் இளம்பெண் வெட்டி கொலை. போலீசார் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-03-25 09:22 GMT
சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் முருகேசன் (45), ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி சுகுணாவள்ளி (40), இவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முருகேசன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டிற்குள் இருந்த தரை தொட்டிக்குள் நேற்று மதியம் சுகுணாவள்ளி ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது சுகுணா வள்ளியின் தலையில் வெட்டு காயங்கள் இருந்தது. இதனால் அவரை கொலை செய்து உடலை தண்ணீர் தொட்டிக்குள் வீசியது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருடன் சுகுணாவள்ளிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் சுகுணா வள்ளியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகுணா வள்ளியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரிடம் கடைசியாக பேசிய நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள், இந்த கொலையில் தொடர்பு உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.