காதலியுடன் நெருக்கமாக இருந்த படத்தை பரப்பிய வாலிபர் கைது

கள்ளகுறிச்சி அருகே கள்ள காதலை கைவிட்டதால் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-31 10:44 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அரிபாலன் (33) கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள திருமணமான 35 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலராக மாறி உள்ளது.   இந்த விஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரிபாலன் உடனான கள்ளத் தொடர்பு அந்த பெண் கைவிட்டுள்ளார். ஆனால் அரிபாலன் தொடர்ந்து தன்னுடன் பழக வேண்டும் எனவும், இல்லாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்புவதாக  மிரட்டி உள்ளார்.    அதற்கு பெண்  சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரிபாலன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரவ விட்டார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் அந்த பொன் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து அரிபாலனை கைது செய்தனர்.
Tags:    

Similar News