விபத்தில் காயம் அடைந்தவரின் செல்போனை திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் அருகே விபத்தில் காயம் அடைந்தவரின் செல்போனை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-12 06:09 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி மகன் பன்னீர்செல்வம்(வயது 59) இவர், செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி கடந்த 2-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப் போது தனியார் பஸ் மோதியதில் காயமடைந்த பன்னீர்செல் வம், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது செல்போனை மர்மநபர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திண்டிவனத்தில் உள்ள செஞ்சி ரோட்டை சேர்ந்த அர்ஜூனன் (19) என்பவர் செல் போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்..

Tags:    

Similar News