வாலிபர் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை!

திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரத்தில் வாலிபரை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-05-14 02:00 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையில் அடைக்கலாபுரம் பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு எதிா்புறம் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று இளைஞா் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருச்செந்தூா் டிஎஸ்பி வசந்தராஜ், தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கந்தசாமிபுரம் கிராம நிா்வாக அலுவலா் நாகாா்ஜுன் அளித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அவா் ஆழ்வாா்கற்குளம், கீழத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் அழகுமுத்து (33). மனைவி இந்திராவை 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா். ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆறுமுகநேரி பகுதியில் தங்கியிருந்து கொத்தானாா் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு சிலருடன் சோ்ந்து காட்டுப் பகுதியில் மது குடித்துள்ளனர்.

அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் கம்பாலும், கல்லாலும் தாக்கி அழகுமுத்து கொலை செய்யப்பட்டுள்ளாா் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News