திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வாலிபர் கைது

செய்யாறு அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-03 12:59 GMT

பைல் படம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவரிடம் வாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 24) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக இளம்பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர்.
Tags:    

Similar News