இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் மரணம் !

கம்பம் சுருளிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் மரணம் அடைந்தார்.

Update: 2024-03-02 08:40 GMT

காவல்துறை

கம்பம் சுருளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் காமக் கவுண்டன்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பினார். அப்போது நாராயண தேவன் பட்டி பகுதியில் எதிரே யோகேஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் முத்துப்பாண்டி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ராயப்பன் பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News