தூத்துக்குடியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை !
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 06:03 GMT
தற்கொலை
தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பிரபாகரன் (23). இவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.