கோயில் குடமுழுக்கு விழா !

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வடுகபட்டி பெத்தண்ணசாமி, சின்னம்மாள், விரசின்னம்மாள், கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Update: 2024-06-13 05:21 GMT
கோவில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி அடுத்துள்ள வடுகபட்டியில் புதுப்பிக்கபட்ட கோயிலான பெத்தண்ண சாமி, சின்னம்மாள், விரசின்னம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், வழிபாடு, முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர் தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேத மந்திரங்கள் முழங்கி புனித தீர்த்தம் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News