கோவில் கும்பாபிஷேக விழா

கிழக்கூரில் முத்து விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-07-01 10:05 GMT

கிழக்கூரில் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா காதப்பாறை ஊராட்சியில் உள்ள வெண்ணைமலை, பசுபதிபாளையம் அருகில் உள்ள கிழக்கூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து புண்யாகம். வேதிகார்ச்சனை, யாக ஹோமம், நாடி சந்தானம், காயத்ரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு யாத்திரதானம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதநீரை எடுத்து கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு மகா தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News