சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திய டெம்போ பறிமுதல்
தக்கலை அருகே கனிம வளம் கடத்திய டெம்போ பறிமுதல்
Update: 2024-06-15 04:50 GMT
டெம்போ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மருந்துக்கோட்டையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஜல்லி கொண்டு செல்வ தற்கான அனுமதி சீட்டு இல்லை என்பது தெரியவந்தது.அந்த சமயத்தில் டெம்போ டிரைவரான ஆலங்காடு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து ஜல்லியுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.