மதுரை தனியார் நாளிதழ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Update: 2023-11-22 05:24 GMT
மதுரை காளவாசல் பைபாஸ் சொக்கலிங்க நகர் பகுதியில் பிரபல தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் யுபிஎஸ் பாக்ஸ் வெடித்து தீப்பற்றி எரிந்தது.அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீச்சி 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து எஸ் .எஸ் காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல செய்தித்தாள் நிறுவனத்தில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.